முகப்பு தொடக்கம்

 
தலைவன்தெய்வங்காட்டித் தெளிப்பத் தெளிந்தமைகூறல்
கொலைசூழ் குருகுமொன் றுண்டாற் கரிநெறு கூறுமெனில்
இலைசூழ் மனையின் முனிவரெல் லாந்தொழு மெங்கள்பழ
மலைசூழ் மறுகெழில் வெங்கைநன் னாடர் மனந்தெளியச்
சிலைசூழ் வனந்திகழ் தெய்வதங் காட்டித் தெளித்ததற்கே.
(293)