முகப்பு தொடக்கம்

 
தவம் எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
கொடியவரை வனத்திருந்து நோற்கி னுந்தோட்
       கொற்றவரை யொத்தவரைத் துறந்து போகிப்
படியவரை மருட்டுதவ வேடந் தாங்கிப்
       படிமுழுது முலாவுகினு மறைக ளெல்லாம்
முடியவரை யறுத்துணர்ந்து புகலி னுந்தீ
       முளரிமலர்க் கரத்தெடுத்த வெங்கை வாணர்
அடியவரை வழுத்தியவ ரடிகள் சூடா
       வவலரையோர் பொருளாக வறிகி லோமே.
(89)