முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
கொண்டசிலை மரமுதலா யினதமைத்தாஞ் சிவமெனவே
       குறிக்க மாட்டார்
அண்டர்முத லாயினோர் பாவிக்கப் படுமயிலை
       யமர்ந்திட் டெம்மைத்
தொண்டுகொளுஞ் சிவஞானி தனைத்தானே சிவோகமெனத்
       துணிந்து கொண்டு
பண்டைநரர் பவமுழுதுந் தொலைத்திடுவ னியாரதிகம்
       பார்த்தி டீரே.
(69)