முகப்பு தொடக்கம்

 
கையறுதோழி கண்ணீர்துடைத்தல்
கோலம் புனைதலிற் குற்றமின் றான்மலர் கொய்துவருங்
காலந் தவறில பந்திடைத் தோல்வியுங் கண்டிலமால்
ஆலந் திகழ்மிடற் றார்வெங்கை நாட்டுன தம்புயத்தில்
நீலஞ் சிறுமுத் துதிர்ப்பதென் னோவுரை நேரிழையே.
(291)