முகப்பு தொடக்கம்

 
தலைவியைப் பாங்கிற்கூட்டல்
கங்கை விழியு முகமுஞ்செவ் வாயுங் கரந்துமைக்குச்
செங்கை யலுஞ்செங் கமலமு மாம்பலுஞ் செப்புமவர்
வெங்கை யனைய விலங்கிலை வேற்கண் விளங்கிழையாய்
மங்கை யரையடைந் தம்மனை யாடுகம் வந்தருளே.
(141)