முகப்பு தொடக்கம்

கண்புன றுளிப்ப வழற்படு மிழுதிற்
      கரைந்துகு நெஞ்சினின் றனையே
பெண்பயி லுருவ மொடுநினைந் தெனது
      பெண்மய லகற்றுநா ளுளதோ
வண்புனல் வேந்த னார்கலிக் குடத்து
      மணிமுகிற் கலயத்தின் முகந்து
தண்புன லாட்ட வாடுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(10)