முகப்பு
தொடக்கம்
கவினழிபுரைத்தல்
கருவரை யெங்க டிருவெங்கை வாணர்தங் கண்ணழித்த
ஒருவரை யன்ன வெழிலுடை யீரிங் குமதருளால்
இருவரை பொன்னு மிருவேலை முத்தமு மீன்றனவாற்
குருவரை யன்னமென் றோளுடை யாட்குக் குறையென்னையே.
(250)