முகப்பு
தொடக்கம்
எறிவளைவேற்றுமைக் கேதுவினாதல்
கனம்வேறு பட்ட மிடற்றார்தம் வெங்கைக் கனகவெற்பில்
புனம்வேறு பட்டிங்கு வந்தவன் றேநம் புரிகுழற்குத்
தனம்வேறு பட்டு விழிவேறு பட்டுத் தளர்ந்துமொழி
மனம்வேறு பட்டதென் னோவுரை யாய்செவ் வரிக்கண்ணியே.
(299)