முகப்பு தொடக்கம்

 
நற்றாயறத்தொடு நிற்றலிற்றமர்பின் சேறலைத் தலைவிகண்டு தலைவற் குணர்த்தல்
கல்வளைத் தன்று புரமெரித் தார்கருங் காவியங்கட்
பல்வளைச் செங்கைக் கொடிபாகர் வெங்கைப் பனிவரையாய்
வில்வளைத் தம்பு பொழிந்தார்த் தெழுந்து வியன்சிலம்பைச்
செல்வளைப் புற்றது போல்வளைந் தாரெமர் தேரினையே.
(365)