முகப்பு
தொடக்கம்
செவிலி நற்றாய்க்கிருவர்காதலையு மறிவித்தல்
கருமா மணிகண்டர் தென்வெங்கை வாணர்கைக் கார்முகமாய்
ஒருமா மலையை வலங்கொண்டு காலை யுதயவெற்பில்
வருமா தவன்றிருத் தேர்மெய்ம்மை போலப்புன் மாலையினில்
செருமா முகமுறச் சென்றாலு மன்பர்தந் தேர்வருமே.
(378)