முகப்பு தொடக்கம்

கருகிச்சி வந்தகடு வருகிப்பொ ருந்தமிளிர்
        களம்வாழ்வு மேவவணிவாய்
    கடலிற்சி றந்தநிற வுடலிற்றி ருந்துமணி
        கதிர்போல வேயுநெடுமால்
ஒருகட்கி சைந்தவடி யிருகட்கி ணங்கவற
        முடையார்மு னோடிவருவாய்
    உலகத்தை வென்றமன மிலகுற்ற மன்றினிடை
        யுமைகாலா வாடல்புரிவாய்
மருகற்பெ ரும்பதியி லொருகற்ப ணங்குதொழ
        மணவாள னாவியுதவா
    மயிலைக்க ணென்பினுயிர் பயில்வுற்றெ ழுந்துவர
        வருவாயெ னாமுனழையா
அருகர்க்க ணங்குதரு முருகர்க்கு கந்தவர
        னபிடேக மாடியருளே
    அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
        யபிடேக மாடியருளே.
(5)