முகப்பு தொடக்கம்

கட்டழ கமைந்து காளையம் பருவங்
        கடந்திடா துள்வலி யுடைத்துக்
    கலங்கல்செய் பிணியின் றியன்றயாக் கையராய்க்
        கல்வியங் கடல்கடந் தவராய்
நட்டவர் விரும்பு மாறுநீ செய்ய
        நடக்குநா ளுடல்வெறுத் துனையே
    நம்பியா ரூரன் முதலியோர் நண்ண
        நானுடல் விடுமென வழிவேன்
பட்டிருள் விழுங்க வலர்கதி ரவனும்
        பனிமதி யோடுயிர்த் தொகையும்
    பார்புனல் சுடுதீ வளிவிசும் பென்னப்
        பட்டவைம் பூதமு மாகும்
எட்டுரு வடைந்து முருவமொன் றின்றி
        யிற்றென வுணர்வரும் பொருளே
    இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
        மீசனே மாசிலா மணியே.
(2)