முகப்பு
தொடக்கம்
கந்தர மிருந்து மடகுநீ ரயின்றுங்
கரநிலத் தமைத்திரு பதமும்
அந்தர நிமிர்ந்து நின்னிலை யறியா
ரரும்பவ மொழியுமோ வுரையாய்
இந்திரன் வனத்து மல்லிகை மலரி
னிண்டைசாத் தியதென நிறைந்த
சந்திரன் முடிமேல் வந்துறுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(57)