முகப்பு தொடக்கம்

கந்தர மிருந்து மடகுநீ ரயின்றுங்
      கரநிலத் தமைத்திரு பதமும்
அந்தர நிமிர்ந்து நின்னிலை யறியா
      ரரும்பவ மொழியுமோ வுரையாய்
இந்திரன் வனத்து மல்லிகை மலரி
      னிண்டைசாத் தியதென நிறைந்த
சந்திரன் முடிமேல் வந்துறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(57)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

கூம்புறு கரமு மலர்ந்திடு முகமுங்
      கொண்டுநின் றனைவலம் புரிவோர்
மேம்படு சரண மலர்ப்பொடி மேனி
      மேற்படிற் பவம்பொடி படுமே
பூம்பொழிற் புகலிக் கிறைவனா னிலஞ்சேர்
      புண்ணியத் தலங்களி னடைந்து
தாம்புனை பதிகந் தொறும்புகழ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(58)