முகப்பு தொடக்கம்

கனலினூ டமைத்த விழுதென வுருகக்
      கற்றதின் றுள்ளமென் கரங்கள்
புனலுமாய் மலருங் கொடுநினைப் பூசை
      புரிந்தில வென்செய்கோ வுரையாய்
சினவுநோய் மருந்து வேறுகொண் டிருக்குஞ்
      சிலம்புக ணாணவுட் கொள்வோர்
சனனநோய் மருந்தா யெழுந்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(65)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

குலத்தினிற் பிறந்து மலகினூல் கற்றுங்
      குணத்தினிற் சிறந்தநல் விரத
பலத்தினிற் கவர்ந்து நின்னடி யவர்க்குப்
      பரிவிலார் கதியிலா தவரே
கலத்தினிற் பொலிந்த விமயமீன் றெடுத்த
      கன்னிநுண் ணிடைமிசைக் களபா
சலத்தினிற் குறுதி கொடுத்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(62)