முகப்பு தொடக்கம்

கல்லெ னத்திர டோட்புனை மீர்ந்தொடைக்
       காமவே ளுலகெல்லாங்
கவன்று தன்வலிக் குடைந்துதம் புறந்தரக்
       கண்டதோர் மிகுவீரன்
வில்லி யற்சுவைக் கரும்பும்வெம் பகழிகள்
       வீயும்விற் குழைநாரி
விளரி யங்குரற் சுரும்புமாய் முடிந்துற
       விளைத்தவோர் விறலாளா
சொல்லி சைப்படு சங்கவண் புலவர்தந்
       தூக்கொடு நிறைநிற்பச்
சொக்கர் கூடலிற் பொற்பல கையினிடாத்
       தூக்கினும் படியொக்கும்
நல்லி சைத்தமிழ் மாலைசூ டியபுகழ்
       நல்லவா தாலேலோ
நகரி நாயகக் காஞ்சிமா நகர்ச்சிவ
       ஞானியே தாலேலோ.
(8)