முகப்பு தொடக்கம்

கரியவண் டிமிர்குவளை யிகலியங் கயல்வென்று
       காதளவு மோடிமீளுங்
கருநெடுங் கண்ணுடைய வொருமாது குழல்வெண்மை
       கருமைசெய் திடுமிவற்குத்
திரியநின் மெய்யினிடை வருகருமை யினைவெண்மை
       செய்வதரி தன்றுகண்டாய்
சிவமென்று முயிரென்றும் வேறுசெய் தகலாத
       திமிரமா மலமகன்றே
இரியவருள் குடியிருக் கின்றவிழி மலர்திறந்
       திணைமலர்ப் பதமுடியின்மே
லிருத்திமன மொழிகடந் துடனின்று குறிகுணழு
       மின்றியரு மறைதனக்கும்
அரியபொரு டனையளிக் கினுமளிக் குவன்விரைந்
       தம்புலீ யாடவாவே
யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட
       னம்புலீ யாடவாவே.
(3)