|
கருவிளைக் கின்றசிற் சிலமொழி பகர்ந்துசில கடவுளரை யிறைவ ரென்று கண்டியொடு வெளியதிரு நீறிழந் திருள்பருகு கனலுமுயர் வானகத்தின் இருவிளக் குந்திகழும் விழியான வெம்மிறையை யிகழ்புறச் சமயர்தங்க ளிருகவுளி னுங்கடிதி னறைவதென வெற்றிவே லிறைமயிலை வெற்பின்முடிமேல் ஒருவிளக் கெனநின்று திகழ்பவா செம்மணிக ளொளிர்பணா முடியனந்த வுரகமென் றிடுபெயர்த் தண்டின்மிசை நிலமென்னு மோரகலின் மெய்த்தபுகழாந் திருவிளக் கிட்டுவைத் திடவல்ல வித்தகா சிறுபறை முழக்கியருளே சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே சிறுபறை முழக்கியருளே.
|
(3) |
|