முகப்பு தொடக்கம்

 
வேறு
கருத்திற் காண்குறு நாடிகண் மூன்றையுங்
       கண்டுநன் னடுநாடி
கலந்தி யங்குறு முயிர்க்கழி விலையெனக்
       காட்டிநோ யினர்நெஞ்சந்
திருத்திக் கைப்புவிட் டருமறைப் பாலொடு
       தீநிறப் பெருமுக்கட்
டீஞ்சு வைக்கனி தன்னையுட் கொள்கெனத்
       தெருட்டுபு முனங்கூட்டு
மருத்துப் பையினைச் சோதித்து வொண்பொடி
       மருந்தெடுத் துடல்பூசி
மணிய ணிந்தரு ளஞ்செழுத் தாகிய
       மந்திரம் பிறழாமல்
உரைத்திட் டோம்புறும் பவப்பிணி மருத்துவ
       னுருட்டுக சிறுதேரே
யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர
       னுருட்டுக சிறுதேரே.
(6)