முகப்பு தொடக்கம்

கண்கணிற் பரிந்த கண்டுவப் பனவே
      கைகணிற் றொழுபவே செவிகள்
பண்களிற் புகழும் புகழ்ச்சிகேட் பனவே
      பதநினை வலம்புரி வனவே
எண்குபுற் றிடப்ப வெழுமணி கரவா
      விருந்துசென் றிருள்கவர் வனபோல்
தண்கதிர்க் கற்றை கான்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(75)