முகப்பு தொடக்கம்

கண்டிகைக் கலனே கலனென விழைந்து
      காயமே லணிந்துவெண் ணீற்றுப்
புண்டரக் குறிசேர் நுதலொடு நினையான்
      பூசனை புரியுமா றருளாய்
முண்டகச் செழும்பூ வெனவிளக் கெரியு
      முடிமிசை முத்துமேற் கட்டித்
தண்டிரைக் கங்கை யாறுசேர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(85)