முகப்பு
தொடக்கம்
சினம்படு முளங்கொன் றவரவை யெனையுஞ்
சேர்ப்பது தகுமுனக் கிசைவண்
டினம்படு மலரி னகவித ழொடுபுல்
லிதழுமொன் றுதலுல குடைத்தே
மனம்படு மடிமை யுளன்சிலை யெறிக்கு
மனங்குழைந் துமையவள் களபத்
தனம்பட வடிவங் குழைந்திடுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(50)