முகப்பு தொடக்கம்

சிம்புளாய் மடங்க லெறுழ்வலி கவர்ந்த
      திறலுமுப் புரஞ்சுடு விறலும்
அம்புயா தனத்தன் முடிகளைந் திட்ட
      வடலுமேத் தினர்க்கிட ருளதோ
உம்பர்மா மதியி லங்கையி லிருந்த
      வுழைகுதித் திருப்பவா ரழல்வான்
தம்பமா யெழுந்து நின்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(96)