முகப்பு
தொடக்கம்
சீரணி புகழுங் கல்வியுஞ் சிறந்த
செல்வமு மில்லில்வாழ் பவர்க்குப்
பேரணி கலமென் புதல்வருங் கதியும்
பெறத்துதிப் பவர்க்கருள் பவனீ
நேரணி கதியை மறந்தவர் கண்டு
நினைந்துற மிக்கபே ரருளால்
தாரணி முழுதுந் தோன்றிடுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(100)