முகப்பு
தொடக்கம்
சுடரிலை நெடுவேற் கருங்கணார்க் குருகித்
துயர்ந்துநின் றலமரு மனநின்
நடநவில் சரண பங்கய நினைந்து
நைந்துநைந் துருகுநா ளுளதோ
மடலவிழ் மரைமாட் டெதினென வருகு
மதியுறக் கார்த்திகை விளக்குத்
தடமுடி யிலங்க வளர்ந்தெழுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(5)