முகப்பு
தொடக்கம்
இறைவி யிறையோன்றன்னைநேர்ந் தியற்படமொழிதல்
சுரும்பு களிக்கும் பொழில்வெங்கை வாணர் சுடர்க்கிரிமேல்
அரும்பு கடுக்க முலையா யுலகுள வாவியெல்லாம்
விரும்பு கொடைத்தண் ணளிவேந்தர் நம்மை வெறுப்பவரோ
கரும்பு கசப்பது வாய்க்குறை யேயிந்தக் காசினிக்கே.
(217)