|
சுருளுங் குடரும் புழுமலமுஞ் சொரியு நீருங் கலந்துபுறந் தோன்றா வயிறும் வேறொருபாற் றோன்றி நரலை யெனுந்தசைதான் திரளும் புன்மார் புறுமுலையுந் திமிரு நறுநாற் றப்பொருளாற் றீர்க்கு முடலைப் புலாலுடம்புஞ் செத்தாற் கிடந்து புறங்காட்டில் புரளுந் தலையுங் கொடுநின்ற புன்மா தரைவா னமுதமே பொன்னங் கொடியே பசுங்கிளியே பூவாய் மயிலே யென்றென்று மருளும் பெரும்பித் தொழியவரு மருந்தே வருக வருகவே மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.
|
(6) |
|