முகப்பு தொடக்கம்

சுருக்குமைம் புலனும் விரிக்குமூ தறிவுந்
      துன்னுநல் லினமுநீத் தகன்றே
இருக்கும்வெங் கயவ ரினமுமென் றருளி
      யென்னைநின் னடிமைசெய் தருள்வாய்
முருக்குமங் கதமா மணியுமிழ்ந் தகன்ற
      முழைதழற் றெனவுளம் வெருவித்
தருக்கமொண் புலிசென் றுறமருள் சோண
      சைலனே கைலைநா யகனே.
(71)