முகப்பு தொடக்கம்

சுட்டுதற் கரிய நின்னைமெய்ஞ் ஞான
      சொரூபியென் றருமறை யனைத்துஞ்
சொல்லுவ துண்மை யென்னநன் குணர்ந்தேன்
      சுரந்தநின் றிருமுலைச் செழும்பால்
வட்டிலிற் கொச்சைப் பிள்ளைமுன் னுண்டு
      வண்புகழ் ஞானசம் பந்த
வள்ளலென் றிடப்பேர் பெற்றரன் மொழிபோன்
      மையறீர் செய்யுள்செய் தமையால்
எட்டிநற் றிகிரி பறித்தெறிந் துரற்கா
      லியானையை யுருட்டிவாங் குதிரை
எறிந்துசங் கதிர்த்துக் கொடுமர முறித்திட்
      டெதிர்ந்திடார் தமைவிடுத் தோடிக்
கிட்டினர்ப் புரட்டி முருகவேள் பூதக்
      கிளைப்பெரு வெள்ளமொத் தெழுந்து
கிளர்மணி முத்த நதியுடை விருத்த
     கிரியமர் பெரியநா யகியே.
(4)