முகப்பு தொடக்கம்

 
மேகத்தொடு சொல்லல்
சென்னிப் பிறையர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பில்
மன்னிப் படருங் கொடிபோற் றழைத்து மலர்வதன்றெங்
கன்னிப் பசுங்கொடி வாடுங்கண் டீர்மெய் கருகிநின்று
மின்னிப் பொழியி லெனையன்று போய்க்கரு மேகங்களே.
(278)