முகப்பு தொடக்கம்

 
செவிலிக்கிகுளை வரைந்தமையுணர்த்தல்
செவ்வாய் மடமயி றன்னையின் னேமணஞ் செய்திருந்தார்
அவ்வா ளரியனை யாரென்று தூத ரறைந்தனரால்
சைவ கமந்திகழ் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்
எவ்வா றறைவ தறங்கோடி செய்துமுன் னீன்றவட்கே.
(358)