முகப்பு
தொடக்கம்
இறைமகள்புறத்தொழுக் கிறைமகளுணர்த்தல்
செய்ச்சே தகத்திற் குளிர்நடந் தாங்குச் செறிந்தவடு
மெய்ச்சே யிழைக்கொடி யன்னார் கடைத்தலை மேயினதால்
கைச்சே ரிடபக் கொடியாளர் வெங்கைக் கனகவெற்பில்
மைச்சேல் விழிச்செந் திருவேநம் வாய்தன் மணிவையமே.
(382)