|
செங்கட் கமல மலர்த்தவிசிற் சிறந்து தனிவீற் றிருக்குமொரு திசைமா முகற்குத் தொழில்படைத்த றிகிரிப் படைவால் வளைசுமந்த அங்கைக் கமல விழிக்கரிய வழகன் றனக்குத் தொழிலளித்த லழித்த லெமக்குத் தொழிலென்னி லடுபோர்ப் பனைக்கைக் களிற்றுரியும் பைங்கட் பணியும் வேணிநெடும் பவளக் கொடியிற் றிரைதிரைத்துப் பாயுங் கங்கைப் பெயர்யாறும் பணியத் தகுகூன் முதுகமுத திங்கட் கொழுந்துங் காட்டென்பேஞ் சிறியேஞ் சிற்றில் சிதையேலே சிகர மயிலைச் சிவஞான தேவா சிற்றில் சிதையேலே.
|
(5) |
|