முகப்பு தொடக்கம்

 
இரவுவருவானைப் பகல்வருகென்றல்
சேல்கொண்ட தண்பணை சூழ்வெங்கை வாணர்தஞ் சேய்திருக்கை
வேல்கொண்ட கண்ணிளம் பெண்ணோடு கூட விருப்பமுறும்
மால்கொண்ட வெங்களி றன்னாய் மலர்மனை வாய்திறக்குங்
கோல்கொண்டு வந்திலை யேலரி தாலவட் கூடுதலே.
(241)