முகப்பு
தொடக்கம்
செவிலி புதல்வியைக் காணாது கவலைகூர்தல்
சேணா டியமதில் வெங்கைபு ரேசர் செழுஞ்சிலம்பில்
மாணா வலர்மொழி வார்க்கேது சொல்வனென் வாய்திறந்து
நாணா தினியெங்ஙன் மீண்டுட னன்னகர் நான்புகுவேன்
காணா மருங்கு லொருமாதை யாற்றிடைக் கண்டிலனே.
(350)