முகப்பு தொடக்கம்

 
தலைவன் றம்மூர்:சார்ந்தமை சாற்றல்
சேய்விளை யாடுந் திருமார்பர் வெங்கைச் செழுஞ்சிலம்பில்
நீவிளை யாடுஞ் சுனையீது நாண்மலர் நீபறிப்ப
மாவிளை யாடும் பொழிலது காணிள மந்திமுதிர்
வேய்விளை யாடுமவ் வெற்பேநம் வெற்பு விளங்கிழையே.
(352)