முகப்பு தொடக்கம்

 
செவிலிபாங்கி யைவினாதல்
சொன்மாது தன்புகழ் யாழிலிட் டேத்தித் தொழுமிமய
நன்மாது பங்கர் திருவெங்கை வாணர்நன் னாடனையாய்
என்மாது சென்ற விடமே தறிந்தில னின்முழுதும்
பொன்மாது சென்ற மனைபோற் பொலிவறப் புல்லென்றதே.
(328)