முகப்பு தொடக்கம்

 
மறுத்தெதிர்கோடல்
சந்தாப வெந்தழ றன்னடி யார்க்குத் தணித்தருளுஞ்
செந்தா மரைமலர்த் தாளர்தம் வெங்கைச் செழுஞ்சிலம்பில்
நந்தா மதுகை யொடுபிறப் பேழு நமைத்தொடர்ந்து
வந்தார் தமையிந் நிறையோ வராமன் மறிப்பதுவே.
(17)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

 
நீடுநினைந்திரங்கல்
சூலக் கரத்தர் திருவெங்கை வாணர்முன் சுட்டமதன்
நீலக் கணையிற்கை வைத்தா னினிச்சற்று நேரநிற்பிற்
காலற் கிரையிடு மென்னா வியையிந்தக் காரிகையார்
கோலக் களபக்குன் றென்றோ மருவக் குறுகுவதே.
(16)