முகப்பு தொடக்கம்

சரிப்பினு மொருபா லிருப்பினு முறக்கச்
      சார்வினும் விழிப்பினு மொருசொல்
உரைப்பினும் போக நுகர்வினு மாவி
      யொழிவினு நின்னையான் மறவேன்
விருப்புறு மலரும் விரையுமே போல
      விம்மியெங் கணுமுறு பொருளாய்
இருப்பினு மரியோ யென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே.
(10)