முகப்பு
தொடக்கம்
கண்டோர் காதலின்விலக்கல்
தாதை யனைய திருவெங்கை வாணர் தடஞ்சிலம்பில்
சீதை யொடுவரு மாலனை யாயித் திருந்திழையாள்
கோதை வெயிலிடைப் பட்டனை யாளெங் குடிலில்வைகி
மாதை யுடன்கொண்டு நாளையுன் னூர்க்கு வழிக்கொள்கவே.
(325)