முகப்பு தொடக்கம்

 
தாழிசை
தாராம லிருந்தாரெனை யாளாம லிருந்தார்
       தனிவெங்கையை யுள்ளார்மய றவிரும்படி யுள்ளார்
சீராரிசை வண்டேயொழி கிலவேள்கர வண்டே
       செறிகின்றிலை குருகேதுய ரறிகின்றிலை குருகே
வாராய்மட மயிலேமிகு தாய்மார்சொலு மயிலே
       வானூடெழு மதியேயெனை முனியாதருண் மதியே
ஊரார்புகல் வம்பேயென விழியோவில வம்பே
       யுரையாயவ ருழையேயென தகலாவிட ருழையே.
(18)