|
திலக வாணுதற் பவளவாய் மலைமக டிரண்முலைத் தடந்தோயுஞ் செஞ்ச டைப்பெரு மான்விளை யாட்டயர் செழுமலர்ப் பொழிற்கூடல் பலகை மீதுமுன் னுயர்த்துள செந்தமிழ்ப் பழமலர்த் தொடைவீழ்ந்து படிந்தெ ழாதிருந் துறுபொருட் சுவைநறாப் பருகுறு பெருங்கல்விப் புலவர் தூய்மன மெனுங்களி வண்டினம் புக்கிருந் தொருங்குண்ணப் புனைந்த விக்கொடுந் தமிழ்ப்புகர்ச் செம்மொழிப் புதுமலர்த் தொடையாரம் உலகெ லாம்புகழ் திண்புயத் தணிபவ னுருட்டுக சிறுதேரே யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர னுருட்டுக சிறுதேரே.
|
(9) |
|