முகப்பு
தொடக்கம்
பாங்கி நின்குறை நீயேசென்றுரை யென்றல்
தீயே னுளங்குடி கொள்வெங்கை வாணர் செழுஞ்சிலம்பில்
வீயேறு மென்றொடைத் தோளண்ண லேயயல் வெறொருவர்
போயே யுரைப்பின் மனமிரங் காளெங்கள் பூங்கொடிக்கு
நீயே வணங்கி மனமுளைந் தோதுக நின்குறையே.
(91)