முகப்பு
தொடக்கம்
துவக்கற வறிந்து பிறக்குமா ரூருந்
துயர்ந்திடா தடைந்துகாண் மன்றும்
உவப்புட னிலைத்து மரிக்குமோர் பதியு
மொக்குமோ நினைக்குநின் னகரைப்
பவக்கடல் கடந்து முத்தியங் கரையிற்
படர்பவர் திகைப்பற நோக்கித்
தவக்கல நடத்த வுயர்ந்தெழுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(2)