முகப்பு
தொடக்கம்
கண்டோரிரக்கம்
துன்படு மையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேல்
மின்படு நுண்ணிடை யாள்விளை யாடிய மென்பொழிலும்
பொன்படு மூசலும் வண்டலம் பாவையும் பூவையுங்கண்
டென்படு மோவறி யேம்பெற்ற தாயென் றிருப்பவளே.
(341)