முகப்பு தொடக்கம்

துன்னுறு துயரப் பிறவிவெங் கொடுநோய்
      தொலைப்பினுந் தொலைத்திடா துறினும்
நின்னடி மலரை யன்றியான் மறந்து
      நினைப்பனோ விறக்கும்வா னவரை
மன்னளி பருக வுடையிறான் மதுவும்
      வாரண மதமும்வெள் ளருவி
தன்னொடு மிகலி யொழுகுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(52)