முகப்பு தொடக்கம்

 
கிழவோன்றஞ்சம் பெறாது நெஞ்சொடுகிளத்தல்
தூற்றிக் கடிமலர்ப் பைந்தேன் கவர்ந்து சுரும்பினங்கள்
ஏற்றிக் குவடுற வைத்தாங் கிதணி னிருந்தவரை
நீற்றிற் றிகழ்வடி வார்வெங்கை வாணர் நெடுஞ்சிலம்பிற்
போற்றிக் குறவர்வைத் தான்மன மேயென் புரிகுவமே.
(158)