முகப்பு தொடக்கம்

 
பாங்கி வலம்புரிகேட் டவன்வர வறிவுறுத்தல்
தெண்ணீர் முடியர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பிற்
புண்ணீர் முழுகு மிலைவே லிறைவர்பொற் றேரின்மிசைப்
பண்ணீர் மொழியணங் கேகிளர்ந் தார்க்கும் பணிலமுன்றன்
கண்ணீர் வழியடைத் தற்குரித் தாகிய கல்லெனவே.
(279)