முகப்பு தொடக்கம்

தெருமரும் பிறவி தமையகன் றிடாத
      தேவரைத் தேவரென் றெண்ணி
அருமருந் தனைய நினையடை யாத
      வறிவிலார் பவப்பிணி யறுமோ
கரிமருங் கணைந்த தெனமுழை வாயிற்
      கார்வர விரைந்தெழுந் துகள்கே
சரிமறைந் திருந்து நாணுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(37)