முகப்பு தொடக்கம்

 
முன்னிலைப்புறமொழி மொழிந்தறிவுறுத்தல்
தொண்டா வெமையுடை யான்வெங்கை சூழிளஞ் சோலையிற்பூந்
தண்டா தளவு மளிகா ளுமக்குத் தகாதுகண்டீர்
கண்டா னினைந்துபின் காணாத போதெங் களைமறக்கும்
வண்டா ரிறைவ ரொடுகூடி யெம்மை மறப்பதுவே.
(155)