முகப்பு
தொடக்கம்
தொடுக்குமா கமங்க ளெலாஞ்சொலைந் தெழுத்துந்
துணிந்தநெஞ் சிருக்கையாற் பகையைப்
படைக்கைதா னிருந்து மஞ்சுறு மவர்போற்
பகட்டுமா மறலியை வெருவேன்
மடக்குவார் கலாப மயிறுயி லெழுந்து
மருவலர் வேங்கைமீ தகவத்
தடக்கைவா ரணங்கள் பிளிறிடுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(82)